Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ அலைபேசி இணைப்புகள் 'கட்' சரி செய்யாததால் மக்கள் அவதி

அலைபேசி இணைப்புகள் 'கட்' சரி செய்யாததால் மக்கள் அவதி

அலைபேசி இணைப்புகள் 'கட்' சரி செய்யாததால் மக்கள் அவதி

அலைபேசி இணைப்புகள் 'கட்' சரி செய்யாததால் மக்கள் அவதி

ADDED : செப் 25, 2025 03:18 AM


Google News
திருவாடானை திருவாடானை, தொண்டி பகுதியில் அலைபேசியில் பேசும் போதே 'கட்' ஆவதை நிறுவனங்கள் சரி செய்யாததால் மக்கள் தவிக்கின்றனர்.

திருவாடானை, தொண்டி பகுதியில் சமீப காலமாக அலைபேசியில் யாரிடமும் முழுமையாக பேச முடியவில்லை. பேசிக்கொண்டிருக்கும் போதே சிக்னல் சரிவர கிடைக்காமல் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. ஒருவர் பேசும் போது அடுத்த முனையில் இருப்பவருக்கு புரியாமல் போவதுமாக உள்ளது. அனைத்து நிறுவனங்களின் இணைப்புகளுக்கும் இப்பிரச்னை உள்ளது.

மக்கள் கூறுகையில், எண்ணை பதிவு செய்தவுடன் அடுத்த முனையில் உள்ள அலைபேசிக்கு ரிங் போவதும் கேட்பதும் இல்லை. பேசிக்கொண்டிருக்கும் போதே 'கட்' ஆகிறது.

இதனால் அவசர தகவல்களை தெரிந்து கொள்ள முடியாமல் அவதியாக உள்ளது. அனைத்து நிறுவன சேவைகளும் இதே போல் உள்ளது. பல நாட்கள் ஆகியும் சரி செய்யாததால் அவதியாக உள்ளது என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us