Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ புதிய குழந்தைகள்  மையம் திறக்க மக்கள் வலியுறுத்தல்

புதிய குழந்தைகள்  மையம் திறக்க மக்கள் வலியுறுத்தல்

புதிய குழந்தைகள்  மையம் திறக்க மக்கள் வலியுறுத்தல்

புதிய குழந்தைகள்  மையம் திறக்க மக்கள் வலியுறுத்தல்

ADDED : மே 25, 2025 04:58 AM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம் : ராமநாதபுரம் வெளிபட்டணம் புதுத்தெருவில் புதிதாக கட்டியுள்ள குழந்தைகள்மையத்தை விரைவில் திறக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தில் ராமநாதபுரம் நகரில் வெளிப்பட்டணம் புதுத்தெருவில் நகர்புற சுகாதாரநிலையம் அருகே புதிதாக குழந்தைகள்மையம் கட்டப்பட்டுள்ளது.கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூனில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

எனவே குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து புதிய குழந்தைகள் மையத்தைதிறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us