Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தெருக்களில் தேங்கிய மழைநீர்

தெருக்களில் தேங்கிய மழைநீர்

தெருக்களில் தேங்கிய மழைநீர்

தெருக்களில் தேங்கிய மழைநீர்

ADDED : செப் 09, 2025 11:03 PM


Google News
Latest Tamil News
முதுகுளத்துார்; முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த மழையால் தெருக்களில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் சிரமப் பட்டனர்.

முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

மதியம் 1:00 மணிக்கு மேல் வானம் மேக மூட்டத்துடன் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

முதுகுளத்துார் பேரூராட்சி, காக்கூர், செல்வநாயகபுரம், கடம்பன்குளம், வெண்ணீர்வாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 1 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது.

ஒரு சில கிராமங்களில் உழவு செய்யப்பட்டிருப்பதால் தண்ணீர் தேங்கியுள்ளது. முதுகுளத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு தெருக்களில் தண்ணீர் குளம்போல் தேங்கி சேறும் சகதியுமாக மாறியது.இதனால் மக்கள் நடப்பதற்கு சிரமப் பட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us