Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரின் காவல் செப். 24 வரை நீட்டிப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரின் காவல் செப். 24 வரை நீட்டிப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரின் காவல் செப். 24 வரை நீட்டிப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரின் காவல் செப். 24 வரை நீட்டிப்பு

ADDED : செப் 19, 2025 03:25 AM


Google News
ராமேஸ்வரம்:இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேருக்கு செப்., 24 வரை சிறைக்காவலை நீட்டித்து ஊர்காவல் துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜூலை 13ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 7 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். 64 நாட்களாக சிறையில் இருந்த 7 மீனவர்களுக்கும் நேற்று தீர்ப்பு வழங்குவதாக இருந்தது. இந்நிலையில் நேற்று ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் 7 மீனவர்களை போலீசார் ஆஜர்படுத்தினர்.

நீதிபதி நளினி சுபாஸ்கரன், கைதான மீனவர்கள் படகின் டிரைவர் யார் என தெரிவிக்கவில்லை. மீனவர்களின் ஆவணங்களை சரி பார்க்க வேண்டி உள்ளதால் செப்., 24 வரை மீனவர்களை சிறைக்காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்களை மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் போலீசார் அடைத்தனர்.

மீனவர்கள் விடுவிக்கப்படலாம் என அவர்களது குடும்பத்தினர் எதிர்பார்த்த நிலையில் சிறைக் காவலை நீட்டித்த தகவலால் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அபராதம் செலுத்தாததால் மீண்டும் சிறையிலடைப்பு இதனிடையே, ராமேஸ்வரத்தில் இருந்து ஜூலை 22ல் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து வெளிக்கடை சிறையில் அடைத்தனர். நீதிமன்ற வாய்தா நாளான நேற்று அவர்களை மன்னார் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக உறுதி செய்து தலா ரூ. 50 ஆயிரம் (இந்திய மதிப்பில் ரூ.14,500) அபராதம் விதித்து விடுதலை செய்தார். இந்த அபராதத்தை மீனவர்கள் செலுத்தாததால் அவர்களை மீண்டும் வெளிக்கடை சிறையில் போலீசார் அடைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us