Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ரூ.12.50 லட்சம் கஞ்சா பறிமுதல்

ரூ.12.50 லட்சம் கஞ்சா பறிமுதல்

ரூ.12.50 லட்சம் கஞ்சா பறிமுதல்

ரூ.12.50 லட்சம் கஞ்சா பறிமுதல்

ADDED : செப் 26, 2025 02:26 AM


Google News
ராமேஸ்வரம்,:ராமேஸ்வரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.12.50 லட்சம் கஞ்சாவை திருச்சி சுங்கத்துறை புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.

ராமேஸ்வரம் அருகே மண்டபம் காந்திநகர் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக திருச்சி சுங்கத்துறை புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று மண்டபம் காந்திநகர் கடற்கரையில் புலனாய்வு பிரிவினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அங்கு கிடந்த ஒரு மூடையை பறிமுதல் செய்து சோதனையிட்டனர். இதில் 50 கிலோ கஞ்சா பார்சல்கள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.12.50 லட்சம். இந்த கஞ்சாவை மண்டபம் சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனர். இதனை இலங்கைக்கு கடத்திச் செல்ல முயன்ற கடத்தல்காரர்கள் யார் என சுங்கத்துறையினர் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us