ADDED : அக் 11, 2025 03:54 AM
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் விநாயகர், தெப்பக்குளம் கரையில் அமைந்துள்ள கைலாச விநாயகர், பஸ்ஸ்டாண்ட் ஆதிரெத்தின கணபதி, தாலுகா அலுவலக அதிர்ஷ்ட விநாயகர், பாரதிநகர் கற்பகவிநாயகர், தொண்டி இரட்டை பிள்ளையார் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பால், சந்தனம், பன்னீர் போன்ற பல்வேறு அபிேஷகங்கள் நடந்தது.
* கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி செல்லும் வழியில் கனவில் வந்த கணேசர் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. சுண்டல், கொழுக்கட்டை, அவல் பொரி கடலை உள்ளிட்டவைகள் நைவேத்தியமாக படைக்கப்பட்டது. பெண்கள் பொங்கல் வைத்தனர்.


