Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ இலங்கை கடற்படையினரால் 47 மீனவர்கள் சிறைபிடிப்பு

இலங்கை கடற்படையினரால் 47 மீனவர்கள் சிறைபிடிப்பு

இலங்கை கடற்படையினரால் 47 மீனவர்கள் சிறைபிடிப்பு

இலங்கை கடற்படையினரால் 47 மீனவர்கள் சிறைபிடிப்பு

ADDED : அக் 10, 2025 12:22 AM


Google News
Latest Tamil News
ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம், 260 விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் வழக்கம் போல் இந்திய - இலங்கை எல்லை அருகே நடுக்கடலில் மீன்பிடித்தனர். அன்றிரவு அங்கு ரோந்து சென்ற இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கி முனையில் நான்கு படகுகளை மடக்கி பிடித்தனர்.

பின், படகுகளில் இருந்த மீனவர்கள் மரியசி லுவை மிக்கேல் 43, ஆரோக்கிய ரூபர்ட் 42, உட்பட 30 பேரை கைது செய்து, இலங்கை தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். அவர்களை நேற்று மன்னார் போலீசாரி டம் ஒப்படைத்தனர். மீனவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து வவுனியா சிறையில் அடைத்தனர்.

அதே போல, அக்., 6ல் காரைக்காலில் இருந்து விஜயசிவராமன் என்பவரது ஆழ்கடல் விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற, 17 மீனவர்கள் இலங்கை நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இப்படகை இலங்கை கடற்படையினர் மடக்கி பிடித்து, 17 பேரையும் கைது செய்து, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இரு சம்பவங்களிலும், 3 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐந்து படகுகள் இலங்கை வசம் சிக்கியதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us