Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ 47 ஆயிரம் பனை விதை நட இலக்கு

47 ஆயிரம் பனை விதை நட இலக்கு

47 ஆயிரம் பனை விதை நட இலக்கு

47 ஆயிரம் பனை விதை நட இலக்கு

ADDED : அக் 09, 2025 11:08 PM


Google News
திருவாடானை: திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 47 ஊராட்சிகளிலும் 47 ஆயிரம் பனை விதைகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பசுமை பரப்பை அதிகரிக்க பனை விதை உள்ளிட்ட மரக்கன்றுகள் வளர்க்க பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் நிறைந்த கிராமப்புறங்களில் பசுமையை அதிகரிக்க செய்யும் முயற்சிகள் ஊக்குவிக்கப்படுகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் பனை விதைகள் நடவு செய்ய ஊரக வளர்ச்சி முகமை திட்டமிட்டு இலக்கு நிர்ணயித்துள்ளது.

அதற்குரிய அறிவிப்பு ஒவ்வொரு ஊராட்சி நிர்வாகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊராட்சி நிர்வாகத்தினரும் மரக்கன்று நடும் இடத்தை தேர்வு செய்து வைக்குமாறும் கலெக்டர் அறிவிக்கும் நாளில் மரக்கன்று நடும் பணியை துவக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி அந்தந்த கிராமங்களில் உள்ள குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலை கரையோரம், விவசாய நிலங்களின் எல்லை, பொது இடங்களில் இடம் தேர்வு செய்வதில் கிராம ஊராட்சி நிர்வாகங்கள் ஈடுபட்டு வருகின்றன. திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் 47 ஊராட்சிகள் உள்ளன. ஒரு ஊராட்சிக்கு 1000 வீதம் 47 ஆயிரம் பனை விதைகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us