Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கடலாடியில் சேதமடைந்த நிலையில் தார் சாலைகள் சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகம்

கடலாடியில் சேதமடைந்த நிலையில் தார் சாலைகள் சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகம்

கடலாடியில் சேதமடைந்த நிலையில் தார் சாலைகள் சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகம்

கடலாடியில் சேதமடைந்த நிலையில் தார் சாலைகள் சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகம்

ADDED : மே 15, 2025 04:13 AM


Google News
கடலாடி: கடலாடி பஸ் ஸ்டாண்டில் இருந்து தேவர் சிலை வழியாக செல்லக்கூடிய சாலை மற்றும் மெயின் பஜார், நீதிமன்றம் செல்லக்கூடிய சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

கடலாடி யூனியன் அலுவலகத்திற்கு 60 கிராம ஊராட்சிகளில் இருந்து பொதுமக்கள் வருகின்றனர். தன்னார்வலர்கள் கூறியதாவது:

கடலாடியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் சந்தை நடக்கிறது. இந்நிலையில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லக்கூடிய இடமாக கடலாடி விளங்குகிறது.

சேதமடைந்த தார் சாலையால் வாகனத்தில் செல்வோர் தவறி விழுந்து காயம் அடைகின்றனர்.

கடலாடி தெருக்கள் மற்றும் பிரதான சாலையை ஆக்கிரமித்து சாலையோர கடைகள் அதிகளவு படிகள் மற்றும் பிளாட்பாரங்களை கட்டி உள்ளனர். இதனால் கனரக வாகனங்கள் கடந்து செல்ல வழியின்றி போக்குவரத்து நெரிசலால் திணறுகிறது. இச்சாலையின் வழியாக கடலாடி நீதிமன்றத்திற்கு செல்லும் பிரதான சாலை உள்ளது.

எனவே கடலாடி வருவாய் துறையினர், யூனியன் நிர்வாகம், போலீசார் ஒன்றிணைந்து சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், புதிய தார்சாலை அமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us