ADDED : ஜூன் 10, 2025 01:09 AM
ராமநாதபுரம்: -ராமநாதபுரம் மூலக்கொத்தளம் பகுதியை சேர்ந்த இளைஞர் ராமேஸ்வரத்திலிருந்து மதுரை சென்ற ரயிலில் அடிபட்டு பலியானார்.
ராமநாதபுரம் மூலக்கொத்தளத்தை சேர்ந்தவர் நாகேஸ்வரன் மகன் சுரேந்திரன் 24, என்பவர் நேற்று மாலை 5:00 மணிக்கு ராமேஸ்வரத்திலிருந்து மதுரை சென்ற ரயிலில் ராமநாதபுரத்தில் அடிபட்டு பலியானார். அவரது உடலை மீட்டு ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.