Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.42,000 கொள்ளை

டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.42,000 கொள்ளை

டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.42,000 கொள்ளை

டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.42,000 கொள்ளை

ADDED : பிப் 01, 2024 03:34 PM


Google News
நெமிலி: நெமிலி அருகே, டாஸ்மாக் ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி, 42,000 ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த புன்னையில், டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு விற்பனையாளராக சிவக்குமார், 49, என்பவர் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, டாஸ்மாக் கடைக்கு வந்த ஒரு கும்பல், இலவசமாக, 'பீர்' கேட்டது. தர மறுத்த அவரை, அக்கும்பல், கத்தியை காட்டி மிரட்டி, டாஸ்மாக் கடை கல்லாபெட்டியில் இருந்த, 42,360 ரூபாயை கொள்ளையடித்து சென்றது. நெமிலி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us