/உள்ளூர் செய்திகள்/சேலம்/ எலக்ட்ரிக் மொபட் திருடியவர் சிக்கினார் எலக்ட்ரிக் மொபட் திருடியவர் சிக்கினார்
எலக்ட்ரிக் மொபட் திருடியவர் சிக்கினார்
எலக்ட்ரிக் மொபட் திருடியவர் சிக்கினார்
எலக்ட்ரிக் மொபட் திருடியவர் சிக்கினார்
ADDED : மார் 19, 2025 01:30 AM
எலக்ட்ரிக் மொபட் திருடியவர் சிக்கினார்
சேலம்:சேலம், அன்னதானப்பட்டி, பழனியப்பன் காலனியை சேர்ந்தவர் குமார், 48. இவர் கடந்த, 15 மாலை, 5:30 மணிக்கு, நெத்திமேட்டில் உள்ள அரிசி அரவை ஆலை முன், டி.வி.எஸ்., எலக்ட்ரிக் மொபட்டை நிறுத்திவிட்டு
சென்றார். சற்று நேரம் கழித்து வந்தபோது, மொபட்டை காணவில்லை. அவர் புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரித்ததில், மணியனுார், காத்தாயம்மாள் நகரை சேர்ந்த குருபிரசாத், 20, திருடியது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், மொபட்டை மீட்டனர்.


