Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ திறந்தவெளியில் தேர்கள்: பாதுகாக்க வலியுறுத்தல்

திறந்தவெளியில் தேர்கள்: பாதுகாக்க வலியுறுத்தல்

திறந்தவெளியில் தேர்கள்: பாதுகாக்க வலியுறுத்தல்

திறந்தவெளியில் தேர்கள்: பாதுகாக்க வலியுறுத்தல்

ADDED : ஜூன் 16, 2024 05:32 AM


Google News
சேலம் : சேலம், கோட்டை அழகிரிநாதர், சுகவனேஸ்வரர் கோவில் தேர் திருவிழா சமீபத்தில் நடந்தது. ஆனால் சின்னக்கடை வீதி, ராஜகணபதி கோவில் அருகே தேரடியில் நிறுத்தப்பட்டிருந்த தேர்களின் பாதுகாப்புக்கு போடப்பட்டிருந்த, இரும்பு தகடுகளால் அமைக்கப்பட்டிருந்த கூரைகள் அகற்றப்பட்டன.

தற்போது இரு கோவில்களின் தேரோட்டம் முடிந்து, 2 வாரங்களுக்கு மேலாகிவிட்டன. ஆனால் மீண்டும் கூரை அமைக்கப்படாத நிலையில் திறந்தவெளியில் தேர்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து தேரில் உள்ள

சிற்பங்கள், அதன் பாகங்கள் சேதமாக வாய்ப்புள்ளதால், அதன் பாதுகாப்புக்கு

கூரை அமைக்க, பக்தர்கள் வலியுறுத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us