Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ நிதி நிறுவன ஊழியர்களிடம் ரூ.12 லட்சம் பறிப்பு

நிதி நிறுவன ஊழியர்களிடம் ரூ.12 லட்சம் பறிப்பு

நிதி நிறுவன ஊழியர்களிடம் ரூ.12 லட்சம் பறிப்பு

நிதி நிறுவன ஊழியர்களிடம் ரூ.12 லட்சம் பறிப்பு

ADDED : ஜூன் 15, 2024 07:48 AM


Google News
சேலம் : சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்தவர் யுவராஜ், 41. தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். அதே நிறுவனத்தில், 'குரூப் ரிலேஷன் ஆபிசர்' ஆக, தலைவாசல், நாவக்குறிச்சியை சேர்ந்த குமார், 27, பணிபுரிகிறார். இவர்கள் அம்மாபேட்டை போலீசில் நேற்று அளித்த புகார் மனு:

நாங்கள், மகளிர் சுய உதவி குழு கடன் தொகை, 12 லட்சம் ரூபாயை வசூலித்துக்கொண்டு, நேற்று மதியம், 2:40 மணிக்கு, 'ஹீரோ ஹோண்டா' பைக்கில், மாசிநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் வங்கியில் டிபாசிட் செய்ய சென்றோம். உடையாப்பட்டி பழைய டாஸ்மாக் கடை அருகே சென்றபோது, 3 பல்சர் பைக்குகளில் வந்த, 6 பேர் கும்பல் எங்களை மறித்து கத்தியை காட்டி மிரட்டி, பணத்தை பறித்துச்சென்றது. அத்துடன் மொபைல் போனை பிடுங்கி சாலையில் வீசி உடைத்துச்

சென்றனர்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us