/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கோட்டை அழகிரிநாதர் கோவிலில் தங்கைக்கு சீர்வரிசை வழங்கல் கோட்டை அழகிரிநாதர் கோவிலில் தங்கைக்கு சீர்வரிசை வழங்கல்
கோட்டை அழகிரிநாதர் கோவிலில் தங்கைக்கு சீர்வரிசை வழங்கல்
கோட்டை அழகிரிநாதர் கோவிலில் தங்கைக்கு சீர்வரிசை வழங்கல்
கோட்டை அழகிரிநாதர் கோவிலில் தங்கைக்கு சீர்வரிசை வழங்கல்
ADDED : ஆக 04, 2024 03:52 AM
சேலம்: கோட்டை அழகிரிநாதர் கோவிலில் அதன் தங்கையான கோட்டை மாரியம்மனுக்கு, 18 வகை சீர்வரிசை வழங்கப்பட்-டன.
ஆடிப்பெருக்கில் சகோதரிகளை, வீடுகளுக்கு அழைத்து சீர்வ-ரிசை வழங்கப்படும். அதன்படி சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவிலில், சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு பெருமாளுக்கு சிறப்பு அபிேஷகம் செய்து தங்க ஆபர-ணங்கள், வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டன.
அதேபோல் பெருமாளின் தங்கையான கோட்டை மாரியம்ம-னுக்கு சிறப்பு அபி ேஷகம் செய்து, பட்டாடை உடுத்தி அலங்க-ரிக்கப்பட்டது. தொடர்ந்து பல்லக்கில் அமர்த்தி ஊர்வலமாக, அழகிரிநாதர் கோவிலுக்கு திரளான பக்தர்கள் சென்றனர்.
அழகிரிநாதர் கோவிலை அடைந்ததும், சுதர்சன பட்டாச்சாரியார், அழகிரிநாதருக்கு சிறப்பு பூஜை செய்தார். தொடர்ந்து வெற்-றிலை, பாக்கு, மாங்கல்யம், பட்டு சேலை, வஸ்திரம், ஆபரணம் உள்பட, 18 வகை சீர்வரிசைகளை, மாரியம்மனுக்கு வழங்-கினார். அப்போது சிறப்பு அர்ச்சனைகள் நடந்தன.
அண்ணன் தந்த பட்டுசேலை, தங்கைக்கு சாத்தப்பட்டு தீபார-ாதனை காட்டப்பட்டது. தொடர்ந்து மாரியம்மன் சீர்வரிசை-களை எடுத்துக்கொண்டு அம்மன் ஊர்வலமாக, பக்தர்களுடன் புறப்பட்டார். இந்த வைபவத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு க-ளித்து தரிசனம் செய்தனர்.