திருட்டு வழக்கில் தலைமறைவானவர் கைது
திருட்டு வழக்கில் தலைமறைவானவர் கைது
திருட்டு வழக்கில் தலைமறைவானவர் கைது
ADDED : அக் 02, 2025 02:04 AM
சேலம், திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்தவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
சேலம் அழகாபுரம், பிடாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சுதாகர், 26, இவர் மீது, 2020, 2021 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீதிமன்ற
விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது.தலைமறைவாக இருந்த சுதாகரை, நேற்று அழகாபுரம் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


