Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பூங்காவில் பிறந்தநாள் விழா:கதண்டு கொட்டி 15 பேர் காயம்

பூங்காவில் பிறந்தநாள் விழா:கதண்டு கொட்டி 15 பேர் காயம்

பூங்காவில் பிறந்தநாள் விழா:கதண்டு கொட்டி 15 பேர் காயம்

பூங்காவில் பிறந்தநாள் விழா:கதண்டு கொட்டி 15 பேர் காயம்

ADDED : அக் 01, 2025 02:04 AM


Google News
ஆத்துார்:தலைவாசல், சித்தேரியை சேர்ந்த விவசாயி செந்தில். இவரது மகன், 4ம் வகுப்பு படிக்கும் சிவகார்த்திகேயன், 9. இவருக்கு நேற்று பிறந்த நாள் கொண்டாட, சித்தேரி, மேல்நாரியப்பனுாரை சேர்ந்த உறவினர்களுடன், முட்டல் ஏரிக்கு வந்தனர். அங்குள்ள ஏரி பூங்காவில் மா மரத்தின் கீழ், 'கேக்' வெட்ட ஏற்பாடு செய்தனர்.

அப்போது மா மரத்தின் மீது ஏறிய குரங்குகள், மரத்தை உலுக்கின. மரத்தில் இருந்த கூட்டில் இருந்து, கதண்டுகள், அங்கிருந்தவர்களை விரட்டி விரட்டி கொட்டின. இதில் சிவகார்த்திகேயன், ஒரு வயது குழந்தை கவன், 5 மாத கர்ப்பிணி நதியா, 19, பவித்ரா, 16, எஸ்.நதியா, 10, மூர்த்தி, 25, கவுதம், 6, ஸ்ரீதரன், 4, மஞ்சு, 29, வேணு, 32, வனத்துறை துாய்மை பணியாளர் அன்னக்கிளி, 45, உள்பட, 15 பேர் காயம் அடைந்து, ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை, அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன் பார்த்து ஆறுதல் கூறினார். ஆத்துார் வனத்துறை, ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us