/உள்ளூர் செய்திகள்/சேலம்/சித்திரச்சாவடி முருகன் கோவிலில் பூஜைக்கு கட்டணம் அமலால் அதிர்ச்சிசித்திரச்சாவடி முருகன் கோவிலில் பூஜைக்கு கட்டணம் அமலால் அதிர்ச்சி
சித்திரச்சாவடி முருகன் கோவிலில் பூஜைக்கு கட்டணம் அமலால் அதிர்ச்சி
சித்திரச்சாவடி முருகன் கோவிலில் பூஜைக்கு கட்டணம் அமலால் அதிர்ச்சி
சித்திரச்சாவடி முருகன் கோவிலில் பூஜைக்கு கட்டணம் அமலால் அதிர்ச்சி
ADDED : பிப் 12, 2024 10:34 AM
சேலம்: சித்திரச்சாவடி முருகன் கோவிலில் பூஜை, அபி ேஷகத்துக்கு கட்டணம் அமலால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சேலம், செவ்வாய்ப்பேட்டையில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், சித்திரச்சாவடி சுப்ரமணியர் கோவில் உள்ளது. அங்கு தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அங்கு பூஜை, அபி ேஷகம், சாத்துபடிக்கு கடந்த மாதம் வரை கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து ஜன., 31 முதல், கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு, பிப்., 1 முதல் அமல்படுத்தப்படுவதாக, அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டு, கோவில் வளாகத்தில் வைத்து கட்டண வசூலை தொடங்கியுள்ளனர்.
அதன்படி அர்ச்சனைக்கு, 10 ரூபாய், அபிேஷகம், 100, வெள்ளி கவச சாத்துபடி, 300, தங்க கவசம், 500, திருமண படிவ கட்டணம், 100, திருமண கட்டணம், 2,000 ரூபாய் என வசூலிக்கப்படுகிறது. இது பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, பா.ஜ., சுற்றுச்சூழல் அணி மாநில தலைவர் கோபிநாத் கூறியதாவது: ஆண்டாண்டு காலமாக கட்டணம் இன்றி முருகனை வழிபட்ட பக்தர்கள் இன்று கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த கோவிலுக்கு அறநிலையத்துறை எந்த நிதி ஒதுக்கீடோ, பக்தர்களுக்குரிய வசதிகளையோ செய்து கொடுக்கவில்லை. அதே நேரம் பக்தர்களிடம் சுரண்டும் திட்டத்தை அரங்கேற்றியுள்ளது. இதை கண்டிக்கிறோம். அரசு உடனே தலையிட்டு கட்டண வசூலை தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.