ADDED : செப் 24, 2025 01:59 AM
ஆத்துார் :ஆத்துார், ரயிலடி தெருவில் உள்ள கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில், வரும், 26 காலை, 11:00 மணிக்கு, மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது. ஆத்துார் கோட்ட மின் நுகர்வோர், மின்சாரம் தொடர்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என, ஆத்துார் கோட்ட செயற்பொறியாளர் ராணி தெரிவித்துள்ளார்.
அதேபோல் கெங்கவல்லி கோட்ட மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம், 26 மதியம், 3:00 மணிக்கு, கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள அலுவலகத்தில் நடக்க உள்ளது. அதில் கோட்ட நுகர்வோர்கள், குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என, கோட்ட செயற்பொறியாளர் வீரபத்ரன் கேட்டுக்கொண்டுள்ளார்.