Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மின் கம்பி அறுந்து விழுந்ததில் தீ மக்காச்சோள தட்டைகள் நாசம்

மின் கம்பி அறுந்து விழுந்ததில் தீ மக்காச்சோள தட்டைகள் நாசம்

மின் கம்பி அறுந்து விழுந்ததில் தீ மக்காச்சோள தட்டைகள் நாசம்

மின் கம்பி அறுந்து விழுந்ததில் தீ மக்காச்சோள தட்டைகள் நாசம்

ADDED : ஜூன் 23, 2025 05:50 AM


Google News
தலைவாசல்: தலைவாசல், வெள்ளையூரை சேர்ந்தவர் சின்னசாமி, 50. இவ-ரது தோட்டத்தில் மக்காச்சோள சாகுபடி செய்துள்ளார். அவரது தோட்ட மேற்புறம், மின் கம்பி செல்கிறது. நேற்று காலை, 11:30 மணிக்கு மின் கம்பி அறுந்து விழுந்ததில் தீப்பற்றி, மக்காச்-சோளம் தட்டைகள் எரிந்தன. கெங்கவல்லி தீயணைப்பு நிலையம், மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனே மின் வினியோகம் நிறுத்தப்பட்டது.

மதியம், 12:10 மணிக்கு தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்-துக்கு சென்று, மேலும் தீ பரவாமல் அணைத்தனர். ஆனால் அறுவடை செய்த அரை ஏக்கர் தோட்டத்தில் தட்டைகள் எரிந்து நாசமாகின. தீயை அணைத்ததால், அறுவடை செய்யாமல், அருகே இருந்த தோட்டம் தப்பியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us