Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கல்பகனுாரில் 50 ஆண்டுக்கு பின் மீண்டும் ஆட்டுச்சந்தை திறப்பு

கல்பகனுாரில் 50 ஆண்டுக்கு பின் மீண்டும் ஆட்டுச்சந்தை திறப்பு

கல்பகனுாரில் 50 ஆண்டுக்கு பின் மீண்டும் ஆட்டுச்சந்தை திறப்பு

கல்பகனுாரில் 50 ஆண்டுக்கு பின் மீண்டும் ஆட்டுச்சந்தை திறப்பு

ADDED : செப் 25, 2025 02:31 AM


Google News
ஆத்துார், :ஆத்துார், கல்பகனுாரில், 1975 வரை, ஆடு, மாடுகளுக்கு புதன்சந்தையுடன், தினசரி காய்கறி மார்க்கெட்டும் நடந்து வந்தது.

அங்கு மீண்டும் கால்நடை சந்தை, தினசரி காய்கறி மார்க்கெட் நடத்த, 2024ல், கல்பகனுார் ஊராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, 50 ஆண்டுக்கு பின் நேற்று, புதன் கால்நடை சந்தை திறக்கப்பட்டது. தவிர தினமும் காலை, 6:00 முதல், 11:00 மணி வரை, காய்கறி மார்க்கெட்டும் திறக்கப்பட்டது. சந்தைக்கு, 100க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகள், கோழிகளை கொண்டு வந்தனர். சந்தை, மார்க்கெட் திறப்பால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us