/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ரேஷன் அரிசி கடத்தியவர் மீது 3ம் முறை பாய்ந்தது 'குண்டாஸ்' ரேஷன் அரிசி கடத்தியவர் மீது 3ம் முறை பாய்ந்தது 'குண்டாஸ்'
ரேஷன் அரிசி கடத்தியவர் மீது 3ம் முறை பாய்ந்தது 'குண்டாஸ்'
ரேஷன் அரிசி கடத்தியவர் மீது 3ம் முறை பாய்ந்தது 'குண்டாஸ்'
ரேஷன் அரிசி கடத்தியவர் மீது 3ம் முறை பாய்ந்தது 'குண்டாஸ்'
ADDED : செப் 27, 2025 01:48 AM
சேலம், சேலம், அழகாபுரத்தை சேர்ந்தவர் அழகேசன், 54. இவரிடம், குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு போலீசார், 1,500 கிலோ ரேஷன் அரிசி, 50 கிலோ கோதுமை, 100 கிலோ பருப்பை பறிமுதல் செய்தனர். ஏற்கனவே, 2024 ஜூன், ஆகஸ்டில், 4 வழக்குகள் பதிவாகி, 1,405 கிலோ ரேஷன் அரிசி, வேன் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
இதனால் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்க, அவரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி நேற்று உத்தரவிட்டார். ஏற்கனவே அவர் மீது, 2021, 2023ம் ஆண்டுகளில் குண்டாஸ் பாய்ந்தது.


