Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஆடுகள் வரத்து அதிகரிப்பு: ரூ.2.55 கோடிக்கு விற்பனை

ஆடுகள் வரத்து அதிகரிப்பு: ரூ.2.55 கோடிக்கு விற்பனை

ஆடுகள் வரத்து அதிகரிப்பு: ரூ.2.55 கோடிக்கு விற்பனை

ஆடுகள் வரத்து அதிகரிப்பு: ரூ.2.55 கோடிக்கு விற்பனை

ADDED : பிப் 10, 2024 11:54 PM


Google News
இடைப்பாடி:சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் டவுன் பஞ்சாயத்தில் ஆட்டுச்சந்தை நேற்று கூடியது. அதில், கடந்த வாரத்தை விட, 200 ஆடுகள் அதிகமாக, 3,820 ஆடுகளை, விவசாயிகள், வியாபாரிகள் கொண்டு வந்தனர். 10 கிலோ வெள்ளாடு, 6,550 முதல், 6,800 ரூபாய், செம்மறியாடு, 6,500 முதல், 6,700 ரூபாய் வரை விலைபோனது. இதன்மூலம், 2.55 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது.

பருத்தி ஏலம்


அதேபோல் கொங்கணாபுரத்தில் உள்ள திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர் விற்பனை சங்க கிளையில் பருத்தி ஏலம் நடந்தது. 2,900 மூட்டைகளை, விவசாயிகள் கொண்டு வந்தனர். 100 கிலோ மூட்டை, பி.டி., ரகம், 6,600 முதல், 7,420 ரூபாய்; டி.சி.எச்., ரகம், 9,550 முதல் 12,089; கொட்டு ரகம், 4,600 முதல், 5,500 ரூபாய் வரை விலைபோனது. இதன்மூலம், 75 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us