/உள்ளூர் செய்திகள்/சேலம்/ அரசு மருத்துவமனையில் மொபைல் திருடியவர் கைது அரசு மருத்துவமனையில் மொபைல் திருடியவர் கைது
அரசு மருத்துவமனையில் மொபைல் திருடியவர் கைது
அரசு மருத்துவமனையில் மொபைல் திருடியவர் கைது
அரசு மருத்துவமனையில் மொபைல் திருடியவர் கைது
ADDED : செப் 25, 2025 02:07 AM
சேலம் :சேலம், சின்னதிருப்பதி, கம்பர் தெருவை சேர்ந்தவர் ரம்யா. இவரது தந்தை உடல்நிலை சரியில்லாததால், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்து கவனித்து வந்தார்.
நேற்று முன்தினம் மதியம், அவரது பையில் இருந்த மொபைல் போனை, மர்ம நபர் திருடியதாக, அரசு மருத்துவமனை போலீசில் புகார் அளித்தார்.
விசாரணையில் திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடி, எர்ணாபட்டை சேர்ந்த சக்திவேல், 28, திருடியது தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.