Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு வேல், மயிலுடன் தயாராகும் சட்டை

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு வேல், மயிலுடன் தயாராகும் சட்டை

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு வேல், மயிலுடன் தயாராகும் சட்டை

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு வேல், மயிலுடன் தயாராகும் சட்டை

ADDED : ஜூன் 19, 2025 02:02 AM


Google News
சேலம், மதுரையில் வரும், 22ல், ஹிந்து முன்னணி சார்பில், முருக பக்தர்கள் மாநாடு நடக்க உள்ளது. அதில் முருக பக்தர்கள் திரளானோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் பயன்படுத்த, சுவாமி முருகனின் அடையாளங்களான, 'வேல், மயில், ஓம்' ஆகியவை, எம்ராய்டரி முறையில் தைத்து, தனித்துவ முறையில் சட்டைகள், சேலத்தில் தயாராகி வருகின்றன.

இதுகுறித்து நெய்க்காரப்பட்டியில் துணி கடை வைத்துள்ள ராஜவேல், 45, கூறியதாவது:

கடந்த, 15 ஆண்டாக ரெடிமேட் சட்டைகள் தயாரித்து விற்கிறோம். முருக பக்தர்கள் மாநாட்டுக்கு, தமிழ் கடவுள் முருகனின் அடையாளங்களான வேல், மயில், ஓம் எழுத்துகள் இணைந்து, காட்டன் மற்றும் லெனின் துணியில் தனித்துவ எம்ப்ராய்டரி ஓவியத்துடன், வெள்ளை நிற சட்டைகள் தயாரித்து, ஒன்று, 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இச்சட்டைகளுக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us