Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ காலி குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

காலி குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

காலி குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

காலி குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

ADDED : செப் 27, 2025 01:30 AM


Google News
ஆத்துார், நரசிங்கபுரம் நகராட்சி, 10வது வார்டு, வடக்கு தில்லை நகரில், 500க்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு, 10 நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லை என, அப்பகுதி பெண்கள், நேற்று காலை, 10:30 மணிக்கு, அதே பகுதியில், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆத்துார் டவுன் போலீசார், பேச்சு நடத்தி, குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால், பெண்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us