/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ராகவேந்திரா மெட்ரிக் பள்ளியில் பயிற்சி 'நீட்' தேர்வில் மாநில அளவில் சாதனை ராகவேந்திரா மெட்ரிக் பள்ளியில் பயிற்சி 'நீட்' தேர்வில் மாநில அளவில் சாதனை
ராகவேந்திரா மெட்ரிக் பள்ளியில் பயிற்சி 'நீட்' தேர்வில் மாநில அளவில் சாதனை
ராகவேந்திரா மெட்ரிக் பள்ளியில் பயிற்சி 'நீட்' தேர்வில் மாநில அளவில் சாதனை
ராகவேந்திரா மெட்ரிக் பள்ளியில் பயிற்சி 'நீட்' தேர்வில் மாநில அளவில் சாதனை
ADDED : ஜூன் 18, 2025 01:33 AM
தலைவாசல்,
தலைவாசல் அருகே வீரகனுாரில் உள்ள ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 'ரீச் அகாடமி'யுடன் இணைந்து நடத்திய ஓராண்டு, 'நீட்' பயிற்சியில், 92.5 சதவீத பிரிவில், விக்னேஷ், 587 மதிப்பெண் பெற்று, அகில இந்திய அளவில், 2,551-வது இடம் பிடித்து, மாநில அளவில் சாதனை படைத்துள்ளார். 7.5 சதவீத பிரிவில், அரசு பள்ளி மாணவி ரஞ்சனி, 440 மதிப்பெண் பெற்று, மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றார்.
இதில், 500 மதிப்பெண்களுக்கு மேல், 4 மாணவர்கள் பெற்றுள்ளனர். இப்பயிற்சியில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று, 25-க்கும் மேற்பட்டோர், பல்வேறு மருத்துவ கல்லுாரிகளில் இடம்பெற வாய்ப்பு பெற்றுள்ளனர்.
இதனால் பள்ளி தலைவர் அருள்குமார், செயலர் செல்வராஜு, பொருளாளர் பிரபா, கல்வி ஆலோசகர்கள் லட்சுமி நாராயணன், இளையப்பன், பழனிவேல், கல்வி குழு இயக்குனர்
ராஜா, இயக்குனர் ராஜேஸ்வரி, ரீச் அகாடமி இயக்குனர்கள், பள்ளி முதல்வர், துணை முதல்வர் ஆகியோர், தேர்ச்சி பெற்ற மாணவர்களையும், உறுதுணையாக இருந்த ரீச் அகாடமிக்கும் பாராட்டு தெரிவித்தனர்.