Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஏற்காடு, மேட்டூரில் சுற்றுலா பயணியர் சரிவு

ஏற்காடு, மேட்டூரில் சுற்றுலா பயணியர் சரிவு

ஏற்காடு, மேட்டூரில் சுற்றுலா பயணியர் சரிவு

ஏற்காடு, மேட்டூரில் சுற்றுலா பயணியர் சரிவு

ADDED : செப் 22, 2025 01:31 AM


Google News
ஏற்காடு:ஏற்காட்டுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும். இந்நிலையில் பள்ளிகளில் காலாண்டு தேர்வு தொடங்கியுள்ளதால், ஏற்காட்டுக்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை சரிந்துள்து.

அதேநேரம் நேற்று, மஹாளய அமாவாசையால், பலரும் முன்னோர்க்கு தர்ப்பணம் கொடுக்க சென்றனர். இதனால் ஞாயிறு அன்றும், போதிய அளவில் சுற்றுலா பயணியர் இல்லை. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் படகு இல்லத்தில் கூட, சுற்றுலா பயணியர் காத்திருக்காமல் உடனுக்குடன் படகு சவாரி செய்தனர்.அதேபோல் மேட்டூர் அணை, பூங்காவை, கடந்த, 14ல், 5,487 சுற்றுலா பயணியர் பார்வையிட்டனர். ஆனால் நேற்று, 2,743 பேர் மட்டும் சுற்றிப்பார்த்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us