Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ எல்லை பாதுகாப்பு வீரர் தற்கொலை

எல்லை பாதுகாப்பு வீரர் தற்கொலை

எல்லை பாதுகாப்பு வீரர் தற்கொலை

எல்லை பாதுகாப்பு வீரர் தற்கொலை

ADDED : ஜூலை 16, 2024 11:21 PM


Google News
மானாமதுரை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஆலம்பச்சேரி முருகன் மகன் சத்யராஜ் 38. இவர் அஸ்ஸாம் மாநில எல்லை பாதுகாப்பு படை வீரராக பணிபுரிந்தார்.

இவருக்கு முருகலெட்சுமி என்ற மனைவியும் ஒரு ஆண்,ஒரு பெண் குழந்தையும் உள்ளன. இவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வசித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் சத்யராஜ் விடுமுறையில் ஆலம்பச்சேரிக்கு வந்தார்.

சத்யராஜ் கீழக்கரை பகுதியில் உள்ளவர்களுக்கு கடன் கொடுத்துள்ளார். அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்காத காரணத்தால் மன உளைச்சலில் இருந்த அவர் நேற்று முன்தினம் இரவு ஆலம்பச்சேரி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us