Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கண்ணுடைய நாயகி ஜூலை 21ல் தங்க முளைப்பாரி ஏந்தி புறப்பாடு 

கண்ணுடைய நாயகி ஜூலை 21ல் தங்க முளைப்பாரி ஏந்தி புறப்பாடு 

கண்ணுடைய நாயகி ஜூலை 21ல் தங்க முளைப்பாரி ஏந்தி புறப்பாடு 

கண்ணுடைய நாயகி ஜூலை 21ல் தங்க முளைப்பாரி ஏந்தி புறப்பாடு 

ADDED : ஜூலை 16, 2024 03:56 AM


Google News
Latest Tamil News
சிவகங்கை, : நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் ஆடி முளைப்பாரி உற்ஸவ விழா தொடங்கியது.

சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் ஜூலை 13 அன்று மாலை 6:30 மணிக்கு விதை பரப்புதல் நிகழ்வுடன் ஆடி முளைப்பாரி உற்ஸவ விழா தொடங்கியது. தினமும் அம்மன் சன்னதி முன் முளைப்பாரியை வைத்து, பெண்கள், சிறுமிகள் கும்மி பாட்டு பாடி வருகின்றனர்.

ஜூலை 20ம் தேதி மாலை 6:30 மணிக்கு முளைப்பாரிகளை பெயர்த்து வைத்தல் நிகழ்வும், ஜூலை 21 அன்று காலை 10:00 மணிக்கு அம்மன் தங்க முளைப்பாரியை தலைமையில் தாங்கி திருவீதி உலா நடைபெறும்.

ஜூலை 22 ல் மாலை 6:30 மணிக்கு தைலகாப்பு அலங்காரம், இரவு 7:00 மணிக்கு கண்ணுடைய நாயகி அம்மன் திருவீதி உலா வந்து, பக்தரகளுக்கு காட்சி அளிக்க உள்ளார்.

முளைப்பாரி விழாவை முன்னிட்டு தினமும் அம்மன் புறப்பாடும், முளைக்கொட்டுதல் நிகழ்வும் நடைபெறும். தேவஸ்தான நிர்வாகிகள் ஏற்பாட்டை செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us