/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிேஷகம் ஆக.22ல் நடைபெறும் 7 நிலைகளுடன் ராஜகோபுரம் தயார் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிேஷகம் ஆக.22ல் நடைபெறும் 7 நிலைகளுடன் ராஜகோபுரம் தயார்
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிேஷகம் ஆக.22ல் நடைபெறும் 7 நிலைகளுடன் ராஜகோபுரம் தயார்
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிேஷகம் ஆக.22ல் நடைபெறும் 7 நிலைகளுடன் ராஜகோபுரம் தயார்
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிேஷகம் ஆக.22ல் நடைபெறும் 7 நிலைகளுடன் ராஜகோபுரம் தயார்
ADDED : ஜூலை 16, 2024 05:04 AM
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிேஷகம் 24 ஆண்டிற்கு பின் ஆக.,22ல் நடைபெற உள்ளது.
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில், அம்மன் நின்ற கோலத்தில் 4 திருக்கரங்களுடன், கலியுகக் கற்பக விருட்சமாக காட்சி தருகிறார். கேட்ட வரம் தரும் தாய்க்கு தாயாகவும், காமதேனுவாகவும் அம்மன் திகழ்கிறார்.
இக் கோயிலில் 2000 ம் ஆண்டு செப்., 3 ம் தேதி 3 நிலைகளுடன் கூடிய ராஜகோபுரத்துடன் கோயிலுக்கு கும்பாபிேஷகம் செய்தனர். அதற்கு பின் 24 ஆண்டு கழித்து கும்பாபிேஷகம் நடத்த முடிவு செய்து, கடந்த 6 மாதங்களுக்கு முன் கோயில் நிர்வாகம் சார்பில் ரூ.1.27 கோடி செலவில் 3 நிலை ராஜகோபுரத்தை 7 நிலையாக உயர்த்தி கட்டியதோடு, கோயில் பிரகாரம், உற்ஸவ சுவாமிகள் புனரமைப்பு செய்து, கும்பாபிேஷகம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
ஆக. 22 ல் கும்பாபிேஷகம்
இக்கோயிலில் ஆக., 19 அன்று அனுக்கை, விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிேஷக பூஜை தொடங்குகிறது. அன்று மதியம் 12:00 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனை, மாலை 4:30 மணிக்கு வாஸ்து சாந்தி, முதல் கால யாகசாலை பூஜை நடக்கிறது.
ஆக., 20 அன்று காலை 8:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை, மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி நடைபெறும். ஆக., 21 அன்று காலை 9:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை, மாலை 6:00 மணிக்கு 5ம் கால யாகசாலை பூஜைகள், தீபாராதனை நடைபெறும்.
ஆக., 22 அன்று காலை 5:30 மணிக்கு ஆறாம் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிேஷக விழா தொடங்குகிறது. காலை 8:00 மணி முதல் 9:15 மணிக்குள் பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் ராஜகோபுரம், மூலஸ்தான கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்தி வைக்கின்றனர்.
அன்று மாலை 4:30 மணிக்கு மகா அபிேஷகம்,தீபாராதனை நடைபெறும். யாகசாலை பூஜை நேரங்களில் வேதபாராயணம், திருமுறை பாராயணம் நடைபெறும். பக்தர்களின் வசதிக்காக அரசு பஸ் இயக்கப்படும்.
பரம்பரை அறங்காவலர் எம்.வெங்கடேசன்தலைமையில் கோயில் ஊழியர்கள் மற்றும் கிராமத்தினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.