Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ எஸ்.புதுார் மருந்து வணிகர் வீட்டில் 14 பவுன், ரூ.1.50 லட்சம் கொள்ளை

எஸ்.புதுார் மருந்து வணிகர் வீட்டில் 14 பவுன், ரூ.1.50 லட்சம் கொள்ளை

எஸ்.புதுார் மருந்து வணிகர் வீட்டில் 14 பவுன், ரூ.1.50 லட்சம் கொள்ளை

எஸ்.புதுார் மருந்து வணிகர் வீட்டில் 14 பவுன், ரூ.1.50 லட்சம் கொள்ளை

ADDED : அக் 06, 2025 01:58 AM


Google News
சிங்கம்புணரி:சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.புதுாரில் மருந்து வணிகர் பிரேம்குமாரின் 45, வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 14 பவுன் நகைகள், ரூ.1.50 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரியில் மருந்து மொத்த வணிகரான பிரேம்குமாருக்கு சொந்த ஊரான எஸ்.புதுாரில் வீடு உள்ளது. செப்., 13 அன்று உறவினர் வீட்டு திருமணத்திற்காக குடும்பத்துடன் எஸ்.புதுாருக்கு அவர் வந்தார். விழாவில் பங்கேற்று விட்டு செப்., 14 அன்று காலை 8:00 மணிக்கு புதுச்சேரி சென்றுவிட்டார்.

இவரது வீட்டிற்கு முன் வாராப்பூரைச் சேர்ந்த சீனிவாசன் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். அக்., 3 காலை 9:00 மணிக்கு கடைக்கு வந்த சீனிவாசன் பிரேம்குமார் வீடு திறக்கப்பட்டு இருந்ததை கண்டு அவருக்கு தகவல் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் எஸ்.புதுார் வந்த பிரேம்குமார் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

பீரோவில் இருந்த செயின், தங்கத்தோடு, அரைஞாண் கயிறு, தங்க ஜிமிக்கி உள்ளிட்ட 14 பவுன் நகைகள், ரூ.1.50 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இதில் ஈடுபட்டவர்களை உலகம்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us