Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ நிதி நிறுவனத்தில் கடன் பெற்றவர் விரக்தியில் தீக்குளிக்க முயற்சி

நிதி நிறுவனத்தில் கடன் பெற்றவர் விரக்தியில் தீக்குளிக்க முயற்சி

நிதி நிறுவனத்தில் கடன் பெற்றவர் விரக்தியில் தீக்குளிக்க முயற்சி

நிதி நிறுவனத்தில் கடன் பெற்றவர் விரக்தியில் தீக்குளிக்க முயற்சி

ADDED : செப் 20, 2025 03:56 AM


Google News
சாலைக்கிராமம்: இளையான்குடி அருகே வடக்கு சாலைக்கிராமத்தை சேர்ந்த தொழிலாளி தனியார் நிறுவனத்தில் வாங்கிய கடனை கட்ட முடியாத விரக்தியில் போலீஸ் ஸ்டேஷன் அருகே தீக்குளித்தார். படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வடக்கு சாலைக்கிராமம் வேலு மகன் சந்திரசேகரன்36, இரும்பு பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லோகுமணி. இவர் ஆர்.எஸ்., மங்கலத்தில் தனியார் நிறுவனத்தில் கடன் பெற்று கடந்த சில மாதங்களாக கடனை கட்டாததால் நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் ஜூலை 31ம் தேதி சாலைக்கிராமம் போலீசில் புகார் கொடுத்தனர்.

போலீசார் இரு தரப்பினரையும் விசாரணை செய்து கடனை முறையாக கட்ட கூறினர். சந்திரசேகரும் சிவகங்கை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.2.75 லட்சம் கடன் பெற்று அதற்கும் கடந்த 3 மாதங்களாக தவணை கட்டாமல் இருந்துள்ளார்.

இதனால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு சந்திரசேகரன் மனைவி லோகுமணி திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள தனது பெற்றோரின் வீட்டிற்கு சென்று விட்டார்.

நேற்று முன்தினம் மதியம் 2:30 மணிக்கு சிவகங்கை தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் வடக்கு சாலைக் கிராமத்திற்கு வந்து சந்திரசேகரனை சந்தித்து கடனை கட்ட கூறியுள்ளனர்.

இதனால் விரத்தியடைந்த சந்திரசேகரன் சாலைக்கிராமம் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள திருமண மண்டபத்திற்கு முன் உடம்பில் பெட்ரோலை ஊற்றி தீவைத்து போலீஸ் ஸ்டேஷனை நோக்கி ஓடி வந்தார்.

அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்து இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சாலைக்கிராமம் போலீசார் விசாரிக்கின்றனர்.

சந்திரசேகரன் சாலைக்கிராமம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தனியார் நிதி நிறுவன ஊழியர் நவநீதன் உள்ளிட்ட 3பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us