Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ தேசிய நெடுஞ்சாலையில் விளக்குகள் இன்றி அதிகரித்து வரும் விபத்து

தேசிய நெடுஞ்சாலையில் விளக்குகள் இன்றி அதிகரித்து வரும் விபத்து

தேசிய நெடுஞ்சாலையில் விளக்குகள் இன்றி அதிகரித்து வரும் விபத்து

தேசிய நெடுஞ்சாலையில் விளக்குகள் இன்றி அதிகரித்து வரும் விபத்து

ADDED : ஜூன் 30, 2025 06:47 AM


Google News
தேவகோட்டை: தேவகோட்டையில் இருந்து ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த ரோட்டில் புளியால் உட்பட பல கிராமங்களுக்கு இணைப்பு சாலை செல்கிறது. அதிக வாகனங்கள் போக்குவரத்து உள்ள இந்த நெடுஞ்சாலையில் போதிய விளக்குகள் இல்லை. பெரும்பாலான பகுதி இருளில் தான் உள்ளது.

இந்நிலையில் மாவிடுதிக்கோட்டை பெட்ரோல் பங்க் அருகே இருள் காரணமாக கடந்த ஒரு வாரத்தில் அடுத்தடுத்து நான்கு விபத்துக்கள் நடந்துள்ளது. இத்துடன் சென்டர் மீடியனில் கார், டூவீலர்கள் விபத்து ஏற்பட்டது.

ஒரே வாரத்தில் அடுத்தடுத்து ஆறு விபத்துகள் ஏற்பட்டுள்ளது.

இதில் இரண்டு விபத்துகள் இருட்டில் மாடு மீது மோதியதில் விபத்து நேரிட்டது.

புளியால் விலக்கில் ரோடு அகலம் குறைவாக இருப்பதாகவும் இதன் காரணமாக அடிக்கடி விபத்து ஏற்பட்டு பலர் பலியாவதால், ரோட்டை விரிவாக்கம் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us