ADDED : செப் 24, 2025 06:35 AM
சிவகங்கை : எஸ்.புதுார் அருகே கட்டுக்குடிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்தவர் ஆரோக்கியசாமி 51. இவர் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் எழுந்தது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், வட்டாரக் கல்வி அலுவலர் பள்ளியில் விசாரணை நடத்தினர்.
மாணவிகளின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தினர். திருப்புத்துார் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து போக்சோ சட்டத்தில் ஆசிரியர் ஆரோக்கியசாமியை கைது செய்தனர்.
இதை தொடர்ந்து நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பு மாரிமுத்து ஆசிரியர் ஆரோக்கியசாமியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.