Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கூடைப்பந்து போட்டி இன்று வீரர்கள் தேர்வு 

கூடைப்பந்து போட்டி இன்று வீரர்கள் தேர்வு 

கூடைப்பந்து போட்டி இன்று வீரர்கள் தேர்வு 

கூடைப்பந்து போட்டி இன்று வீரர்கள் தேர்வு 

ADDED : மே 27, 2025 12:51 AM


Google News
சிவகங்கை: மாநில கூடைபந்து போட்டியில் கலந்து கொள்ள சிவகங்கையில் இன்று (மே 27) வீரர்கள் தேர்வு நடக்கிறது என சிவகங்கை கூடைப்பந்து கழக மாவட்ட தலைவர் ஆர்.மகேஷ் துரை தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: சென்னை காட்டாங்குளத்துார் எஸ்.ஆர்.எம்.,அறிவியல் தொழில்நுட்ப கல்லுாரியில் ஜூன் 2 முதல் 10 ம் தேதி வரை தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் சார்பில் மாநில அளவிலான இளையோர் (18 வயதிற்கு உட்பட்டோர்) ஆண், பெண் பிரிவுக்கான கூடைப்பந்து போட்டி நடக்கிறது.

இதில் பங்கேற்பதற்கான வீரர்கள் தேர்வு இன்று (மே 27) மதியம் 3:00 மணிக்கு சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இதில் சேர மாணவ, மாணவிகள் ஜன., 2007க்கு பின் பிறந்திருக்க வேண்டும். பிறப்பு சான்று அவசியம். ஆதார் அட்டை நகலுடன் தேர்வில் பங்கேற்கலாம், என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us