Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ரோட்டோரங்களில் மருத்துவக்கழிவு கண்காணிப்பு பணியில் தொய்வு

ரோட்டோரங்களில் மருத்துவக்கழிவு கண்காணிப்பு பணியில் தொய்வு

ரோட்டோரங்களில் மருத்துவக்கழிவு கண்காணிப்பு பணியில் தொய்வு

ரோட்டோரங்களில் மருத்துவக்கழிவு கண்காணிப்பு பணியில் தொய்வு

ADDED : செப் 25, 2025 05:04 AM


Google News
சிவகங்கை : மருத்துவ கழிவு மேலாண்மை விதிகளை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் சூழல் மாறுபாடு அமைச்சகம் வகுத்துள்ளது. அதன்படி கையுறை, பயன்படுத்திய ஊசி, காலாவதியான மருந்து, மாத்திரைகள், அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்திய பொருட்கள், குளுக்கோஸ், மருந்து பாட்டில்கள் போன்ற மருத்துவக் கழிவுகளை அதற்குரிய பெட்டிகளில் கொட்டி வைத்து பாதுகாப்பாக அகற்ற வேண்டும்.

மருத்துவக் கழிவுகளை அழிப்பதற்கு தமிழகம் முழுவதும் பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. முறையாக மருத்துவக் கழிவு அகற்றப்படுகிறதா என்பதை சுகாதாரத் துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

சிவகங்கை மாவட்டத்தில் இவற்றை கண்காணிக்கின்றனரா என தெரியவில்லை. சில தினங்களாகவே சிவகங்கை மாவட்டத்தில் ரோட்டோரங்களில் அதிகம் மருத்துவக் கழிவு கொட்டப்படுகின்றன. அந்த பகுதி பொதுமக்கள் நோய் பாதிக்கும் அச்சம் உள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர். சில தினங்களுக்கு முன்பு பனங்காடி ரோட்டில் பெரியார் கால்வாயில் 100க்கும் மேற்பட்ட காலாவதியான கால்சியம் கார்பனேட் விட்டமின் மாத்திரைகள் கொட்டப்பட்டது. நேற்று முன்தினம் எம்.எல்.ஏ., அலுவலகம் எதிரே ஊசி, மருந்துகள், காலி குளுக்கோஸ் பாட்டில்கள் கொட்டப்பட்டிருந்தன. மருத்துவ கழிவுகளை கொட்டு வோர் மீது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us