/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சிங்கம்புணரி அருகே பள்ளி மாணவர் இறப்பில் மர்மம் சிங்கம்புணரி அருகே பள்ளி மாணவர் இறப்பில் மர்மம்
சிங்கம்புணரி அருகே பள்ளி மாணவர் இறப்பில் மர்மம்
சிங்கம்புணரி அருகே பள்ளி மாணவர் இறப்பில் மர்மம்
சிங்கம்புணரி அருகே பள்ளி மாணவர் இறப்பில் மர்மம்
UPDATED : ஜூலை 02, 2025 03:58 AM
ADDED : ஜூன் 30, 2025 11:54 PM

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே தனியார் பள்ளி மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் உடலை அரசு மருத்துவமனையில் போட்டுவிட்டு பள்ளி நிர்வாகத்தினர் ஓட்டம் பிடித்தனர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே வேங்கைப்பட்டியை சேர்ந்தவர்கள் பாலமுருகன் - அழகு மீனா தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகள், ஒரு மகன் இருந்தனர். 7 வயது மகன் அஸ்விந்த் சிங்கம்புணரி அருகே அணைக்கரைப்பட்டி பாரதி நகரில் உள்ள ஜெஸ்ரில் என்ற தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்தார். நேற்று பள்ளி வேன் பழுதான நிலையில் கார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் அவர் உட்டப சிலர் பள்ளிக்கு சென்றனர்.
மாலை 4:10 மணிக்கு சிறுவனின் பெற்றோருக்கு பள்ளியிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவர்களது மகனுக்கு வலிப்பு வந்துள்ளதாகவும் சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். பெற்றோர் சென்று பார்த்தபோது சிறுவன் இறந்திருந்தார். கால், வாய், கன்னத்தில் காயம் இருந்தது. இதனிடையே மதியம் 3:30 மணிக்கு சிறுவனின் உடலை பள்ளி டிரைவர்கள் 2 பேர் காரில் கொண்டு வந்து போட்டு விட்டு சென்றதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்தனர். இச் சம்பவத்தை கண்டித்து சிறுவனின் பெற்றோர், உறவினர்கள் சிங்கம்புணரி நான்கு ரோடு சந்திப்பில் மறியலில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மறியலில் ஈடுபட்டனர். சிங்கம்புணரி- திண்டுக்கல் ரோட்டில் கடைகளை அடைக்க வலியுறுத்தியதால் கடைகள் அடைக்கப்பட்டன.
உடல் பறிமுதல்
அப்போது அரசு மருத்துவமனை வார்டில் வைக்கப்பட்டிருந்த மாணவர் உடலை போலீசார் பெற்றோருக்கு தெரியாமல் பிரேத பரிசோதனை அறைக்கு கொண்டு சென்றனர்.
இதை கண்டித்து அங்கிருந்த உறவினர்கள் உடலை போலீசாரிடம் இருந்து பறிமுதல் செய்து வாயில் முன் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுவரை பள்ளி நிர்வாகம் தங்களுக்கு எந்த தகவலும் சொல்லவில்லை, யாரும் வரவில்லை. குற்றவாளிகளை கைது செய்யப்படும் வரை பிரேத பரிசோதனைக்கு உடலை எடுக்கக் கூடாது என்று கோஷமிட்டனர். இதை தொடர்ந்து உடல் வார்டுக்குள் கொண்டு வைக்கப்பட்டது
காவு வாங்கிவிட்டனர்
சிறுவனின் தந்தை பாலமுருகன் தெரிவித்ததாவது:
எனது மகனுக்கு எந்த நோயும் இல்லை, காலையில் நன்றாகத்தான் பள்ளிக்கு அனுப்பி வைத்தோம்.
அவனுக்கு இதுவரை வலிப்பு நோய் எதுவும் வந்ததே இல்லை. மகனுக்கு வலிப்பு நோய் வந்து மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக பள்ளியில் இருந்து தொலைபேசியில். மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது எனது மகன் காயங்களுடன் பிணமாக கிடந்தான்.
ஐந்து மணி நேரத்திற்கு முன்பாகவே மகன் இறந்திருக்க கூடும். உடலை அசைக்க முடியவில்லை. பள்ளி கட்டடம் புதிதாக கட்டியுள்ளனர்.
அதற்கு என் மகனை காவு வாங்கி விட்டனர். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
எப்படி இறந்தார் என போலீசார் விசாரிக்கின்றனர்.