ADDED : பிப் 25, 2024 06:13 AM
சிவகங்கை சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லுாரியில் வெள்ளி விழாவை முன்னிட்டு பொருளாதாரத் துறை சார்பில் காலநிலை மாற்றம், நிலையான வளர்ச்சி எனும் தலைப்பில் தேசிய கருத்தரங்கு நடந்தது.
கல்லுாரி முதல்வர் பொறுப்பு இந்திரா தலைமை வகித்தார். பேராசிரியர் வெண்ணிலா வரவேற்றார். பொருளாதாரத்துறை தலைவர் சீலா முன்னிலை வகித்தார். ஒய்வு பெற்ற பேராசிரியர் அருணாச்சலம், பேராசிரியர் சுரேஷ், கலந்துகொண்டனர். 30 மாணவர்கள் ஆய்வுக் கட்டுரை வாசித்தனர். அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது. பேராசிரியர் பிச்சை முத்து நன்றி கூறினார்.