Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருத்தளிநாதர் கோயிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்  அக். 22 முதல் 28 வரை நடக்கும்

திருத்தளிநாதர் கோயிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்  அக். 22 முதல் 28 வரை நடக்கும்

திருத்தளிநாதர் கோயிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்  அக். 22 முதல் 28 வரை நடக்கும்

திருத்தளிநாதர் கோயிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்  அக். 22 முதல் 28 வரை நடக்கும்

ADDED : அக் 13, 2025 04:00 AM


Google News
திருப்புத்துார் : திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் 47ம் ஆண்டு கந்த சஷ்டி விழா அக்., 22 முதல் 28ம் தேதி வரை நடைபெறுகிறது.

கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு தினமும் மாலை 6:00 மணிக்கு முருகனுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடைபெறும். ஆறாம் நாளான அக்., 27 அன்று மாலை 4:30 மணி முதல் 6:00 மணிக்குள் திருப்புத்துார் கீழரதவீதி சீரணி அரங்கம் முன் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும்.

ஏழாம் நாளான அக்., 28 அன்று காலை 10:40 முதல் 11:30 மணிக்குள் சுப்பிரமணியர், தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறும். ஏற்பாடுகளை திருமுருகன் திருப்பேரவையினர் செய்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us