Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தென்காசி/ வாலிபருடன் பைக்கில் சென்ற மாணவி சாவு

வாலிபருடன் பைக்கில் சென்ற மாணவி சாவு

வாலிபருடன் பைக்கில் சென்ற மாணவி சாவு

வாலிபருடன் பைக்கில் சென்ற மாணவி சாவு

ADDED : அக் 08, 2025 03:17 AM


Google News
திருநெல்வேலி:தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே வல்லத்தை சேர்ந்த, 16 வயது சிறுமி, குற்றாலத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.

மாணவிக்கு, இன்ஸ்டாகிராம் மூலமாக அகரகட்டுவை சேர்ந்த கோகுல், 24, என்பவருடன் நட்பு ஏற்பட்டது.

அக்., 5 மாலை, கோகுல் தன் டூ - வீலரில், மாணவியுடன் செங்கோட்டை - குற்றாலம் சாலையில் வேகமாக சென்றார். வளைவில் டூ - வீலர் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது.

இதில், காயமடைந்த மாணவி திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் இறந்தார். சிறுமி இறப்பிற்கு காரணமான வாலிபர் மீது, போக்சோ வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி, சிறுமி குடும்பத்தினர், செங்கோட்டை போலீஸ் ஸ்டேஷன் முன் நேற்று மறியலில் ஈடுபட்டனர். தலைமறைவான வாலிபரை போலீசார் தேடுகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us