Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஓய்வு பெற்ற ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை

ஓய்வு பெற்ற ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை

ஓய்வு பெற்ற ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை

ஓய்வு பெற்ற ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை

ADDED : ஜூலை 17, 2024 12:15 AM


Google News
தேனி : உத்தமபாளையம் இந்திரா நகர் மூதாட்டி லோகமணி 78. இவர் இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி, ஓய்வு பெற்று மகனுடன் வசித்தார்.

லோகமணியின் கணவர் ரங்கசாமி 3 மாதங்களுக்கு முன் இறந்தார். ஜூலை 11ல் லோகமணி வாந்தி எடுத்தார்.

இதுகுறித்து மகன் குமனன், அவரது மனைவி பிரியா விசாரித்தனர். லோகமணி வீட்டில் கழிப்பறை கழுவும் மருந்தை குடித்ததாக கூறினார். உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை செய்து வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

பின் மறுநாள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்து தீவிர சிகிச்சைக்கு தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலன் இன்றி லோகமணி இறந்தார். உத்தமபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us