/உள்ளூர் செய்திகள்/தேனி/ தேனி பஸ் ஸ்டாண்டில் குடிநீர், இருக்கை வசதிஇன்றி பயணிகள் தவிப்பு நடைபாதை ஆக்கிரமிப்பால் ரோட்டில் நிற்கும் அவலம் தேனி பஸ் ஸ்டாண்டில் குடிநீர், இருக்கை வசதிஇன்றி பயணிகள் தவிப்பு நடைபாதை ஆக்கிரமிப்பால் ரோட்டில் நிற்கும் அவலம்
தேனி பஸ் ஸ்டாண்டில் குடிநீர், இருக்கை வசதிஇன்றி பயணிகள் தவிப்பு நடைபாதை ஆக்கிரமிப்பால் ரோட்டில் நிற்கும் அவலம்
தேனி பஸ் ஸ்டாண்டில் குடிநீர், இருக்கை வசதிஇன்றி பயணிகள் தவிப்பு நடைபாதை ஆக்கிரமிப்பால் ரோட்டில் நிற்கும் அவலம்
தேனி பஸ் ஸ்டாண்டில் குடிநீர், இருக்கை வசதிஇன்றி பயணிகள் தவிப்பு நடைபாதை ஆக்கிரமிப்பால் ரோட்டில் நிற்கும் அவலம்

செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்
பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்காக முதலாவது பிளாட்பாரம் மேல்மாடியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து 3 பிளாட்பாரங்களிலும் சுத்திகரிப்பு குடிநீர் வழங்கும் வகையில் இயந்திரங்கள் அமைக்கப்பட்டது. இவை அனைத்தும் ஒரு ஆண்டு கூட செயல்பட வில்லை. பழுதாகி, பராமரிப்பு இன்றி 10 ஆண்டுகளாக முடங்கியுள்ளது. தாகத்தில் தவிக்கும் பயணிகள் கடைகளில் விலை கொடுத்து பாட்டில் குடிநீர் வாங்கி பருகும் அவலம் தொடர்கிறது. சில மாதங்களுக்கு முன் கோடையை சமாளிக்கும் வகையில் நகராட்சி 3 இடங்களில் குடிநீர் வழங்க பிளாஸ்டிக் தொட்டிகள் வைக்கப்பட்டாலும் அதில் முறையாக தண்ணீர் நிரப்புவதில்லை. மாதம் இருமுறை தண்ணீர் ஊற்றினாலும் அதனை கடைக்காரர்கள் தான் பயன்படுத்தி காலி செய்து விடுகின்றனர்.
நடைபாதை ஆக்கிரமிப்பால் அவதி
இங்குள்ள 3 நடைமேடைகளையும் கடை நடத்துவோர் விருப்பம் போல் ஆக்கிரமித்து பயணிகளுக்கு இடையூறாக வைத்து வியாபாரம் செய்கின்றனர். பயணிகள் நடந்துசெல்ல முடியாமல் பஸ்கள் வரும் ரோட்டில் இறங்கி செல்ல வேண்டியுள்ளது. பஸ்சிற்காக காத்திருப்போர் அமர இருக்கை வசதி எதுவும் இல்லை. பெண்கள், முதியோர் பஸ்கள் நிறுத்தப்படும் பஸ் பே பகுதியில் கீழே உட்கார்ந்து செல்கின்றனர். நடைபாதை ஆக்கிமிப்பை நகராட்சி கண்டு கொள்ளாததால் பொதுமக்கள் அவதியடைக்கின்றனர்.
முழுமையடையாத கூரை பணிகள்
இங்கு வரும் பயணிகள் வெயில், மழைக்கு பாதுகாப்பாக ஒதுங்கி நிற்க கூட போதிய வசதி இல்லை. மூன்று பிளாட்பாரங்களிலும் கூரை பிளாஸ்டிக் சீட்டால் அமைக்கப்பட்டிருந்தது. அவை சேதமடைந்தாததால், ஓரு ஆண்டுக்கு முன் முதல் இரு பிளாட்பாரங்களில் உள்ள கூரையை சீரமைக்க டெண்டர் விடப்பட்டது. தனியார் நிறுவனம் மேற்கொண்ட பணி அரைகுறையாக பாதியோடு நிறுத்தப்பட்டது. 3வது பிளாட்பாரத்தில் இதுவரை பணிகள் மேற்கொள்ளவில்லை.
ஏ.டி.எம்., பற்றாக்குறை
பஸ் ஸ்டாண்டில் விரைவு போக்குவரத்து கழக டிக்கெட் பதிவு செய்யும் இடம் அருகே ஒரு தேசியமயமாக்கப்பட்ட, தனியார் வங்கி ஏ.டி.எம்.,கள் அமைக்கப்பட்டன. அந்த ஏ.டி.எம்.,யில் இருந்து அருகில் கடை நடத்துவோர் மின்சாரம் திருடி பயன்படுத்தியால் பல லட்சம் மின்கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் வங்கி ஏ.டி.எம்., பல ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. தனியார் வங்கி ஏ.டி.எம்., மட்டும் செயல்பாட்டில் உள்ளது. இந்த ஏ.டி.எம்., உள்ளதே பலருக்கு தெரியாத நிலை உள்ளது.
புகலிடமாகும் பூங்கா
பஸ் ஸ்டாண்ட் முன்புறம் உள்ள பூங்கா குடிமகன்களின் கூடாரமாக மாறி உள்ளது. அங்கு போதிய வெளிச்சம் இல்லாததால் சமூக விரோதிகள் தவறான செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர். போதிய பராமரிப்பு இன்றி பல இடங்களில் கட்டடங்களில் செடிகள், மரங்கள் வளர்கின்றன.
கழிப்பிடத்தில் கட்டண கொள்ளை
மக்கள்செல்வன், சமூக ஆர்வலர், தேனி:
இருக்கைகள் இன்றி அவதி
ஜெயபாண்டி, மாவட்ட குழு உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூ., தேனி.மூணாறு பஸ்கள் நிற்கும் இடத்தில் மட்டும் இருக்கைகள் உள்ளது. அதுவும் சேதமடைந்து உள்ளது. மற்ற இடங்களில் இருக்கைகள் இல்லை. இதனால் பஸ்சிற்காக காத்திருக்கும் முதியவர்கள், கர்பிணிகள், குழந்தைகள் அவதியடைக்கின்றனர். கடைகள் முன் அமரக்கூடாது என கடைக்காரர்கள் விரட்டுவதால் பஸ்கள் வரும் வரை நிற்க வேண்டியுள்ளது. வார இறுதி நாட்கள் விஷேச நாட்களில் டூவீலர்கள் நிறுத்தங்களில் போதிய இட வசதி இல்லாத நிலை உள்ளது. மேலும், கார்களை நிறுத்த பார்க்கிங் வசதி அமைக்க வேண்டும்.
தீர்வு
பஸ் ஸ்டாண்ட் நடைமேடை ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.