Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ வைகை அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு

வைகை அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு

வைகை அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு

வைகை அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு

ADDED : ஜூலை 12, 2024 08:57 PM


Google News
ஆண்டிபட்டி:மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல் போக பாசனத்திற்கு ஜூலை 3 ல் தண்ணீர் திறக்கப்பட்டது. துவக்கத்தில் வினாடிக்கு 300 கன அடியாக திறக்கப்பட்ட நீர் அன்றைய தினமே வினாடிக்கு 500 கன அடியாக உயர்த்தப்பட்டது. ஜூலை 5ல் வினாடிக்கு 750 கன அடியாக உயர்த்தப்பட்ட நீர், நேற்று காலை 10:30 மணிக்கு வினாடிக்கு 800 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மதுரை, தேனி, ஆண்டிபட்டி-- சேடபட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம் போல் வெளியேறுகிறது. நேற்று காலை அணை நீர்மட்டம் 51.94 அடியாக இருந்தது. அணை உயரம் 71 அடி. நீர்வரத்து வினாடிக்கு 788 கன அடியாக இருந்தது





      Our Apps Available On




      Dinamalar

      Follow us