திறனறித்தேர்வு எழுதிய 4912 மாணவர்கள்
திறனறித்தேர்வு எழுதிய 4912 மாணவர்கள்
திறனறித்தேர்வு எழுதிய 4912 மாணவர்கள்
ADDED : அக் 12, 2025 04:59 AM
தேனி : பிளஸ் 1 மாணவர்களுக்கான தமிழ் திறனறித்தேர்வு மாவட்டத்தில் 20 மையங்களில் நேற்று நடந்தது. இந்த தேர்வு எழுத அரசு, உதவி பெறும், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 5157 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 4912 பேர் தேர்வு எழுதினர். 245 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகினர்.
தேர்வு கண்காணிப்பு பணியில் ஆசிரியர்கள், அலுவலர்கள் 150க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருந்தனர்.
இத்தேர்வில் தகுதி பெறும் மாணவர்களக்கு ஆண்டிற்கு ரூ. 10 ஆயிரம் வீதம் இரு ஆண்டுகளுக்கு ரூ. 20 ஆயிரம் வழங்கப்படும்.


