Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/உண்ணாவிரதம் இருக்க முயன்ற விவசாயி

உண்ணாவிரதம் இருக்க முயன்ற விவசாயி

உண்ணாவிரதம் இருக்க முயன்ற விவசாயி

உண்ணாவிரதம் இருக்க முயன்ற விவசாயி

ADDED : பிப் 02, 2024 12:07 AM


Google News
பெரியகுளம்-தேனி மாவட்டம் மயிலாடும்பாறை கிராமம் வனதாயபுரத்தை சேர்ந்தவர் விவசாயி செல்வம்.

இவர் தோட்டத்தில் வளர்த்த தென்னை, இலவம் மரத்தை அகற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி லட்சுமிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு குடும்பத்துடன் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள இருந்தார்.

இதனை அறிந்த தென்கரை போலீசார் கோர்ட் பகுதிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட முயன்ற செல்வத்தை, தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுக்குமாறு அறிவுறுத்தினர். இதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us