ADDED : மார் 18, 2025 05:36 AM
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் மொக்கப்பாண்டி 30. மனைவி லீலாவதி 25. இவர்களது மகன் இளமாறன் 3. நேற்று வீட்டில் மின்மோட்டாரை இயக்கி குடிநீர் பிடித்துக்கொண்டிருந்தனர்.
மின் ஒயரை இளமாறன் மிதித்துள்ளார். ஒயரில் மின் கசிவினால் மின்சாரம் தாக்கியதில் இளமாறன் மயங்கி விழுந்தார்.
தேவதானப்பட்டி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதனை செய்த டாக்டர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


