Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ இணைய வழி குற்ற தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி

இணைய வழி குற்ற தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி

இணைய வழி குற்ற தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி

இணைய வழி குற்ற தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி

ADDED : செப் 28, 2025 03:33 AM


Google News
உத்தமபாளையம்: பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 படிக்கும் மாணவிகளிடம் இணைய பயன்பாடு அதிகரித்து வருகிறது. எனவே இணைய வழி குற்றங்கள் நிகழாமல் தடுக்க அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக பள்ளி கல்வி துறை அகல் விளக்கு என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கி, அவர்கள் மூலம் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிடப்பட்டது. உத்தமபாளையத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் தேனி மாவட்டத்தை சேர்த்த 112 ஆசிரியைகளுக்கு பயிற்சி வழங்கபபட்டது. முதல்வர் ராஜேஸ்வரி, துணை முதல்வர் கீதாராணி, ஆண்டிபட்டி வட்டார வள மைய ஆசிரியர் ராமேஸ்வரி ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us