ADDED : செப் 19, 2025 02:26 AM
தேனி: கொடுவிலார்பட்டியில் உள்ள தேனி கம்மவார் சங்கம் பொறியியல் கல்லுாரியில் மாவட்ட நிர்வாகம், முன்னோடி வங்கி சார்பில் கல்வி கடன் முகாம் நடந்தது.
கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்தார்.
முகாமில் 142 மாணவர்கள் ரூ. 9.30 கோடி கடனுதவி கோரி விண்ணப்பித்தனர். அவர்களில் 12 மாணவர்களுக்கு ரூ.1.95 கோடி வங்கி கடன் உதவி வழங்கப்பட்டது.
விழாவில் முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், கனரா வங்கி சுயதொழில் பயிற்சி மைய இயக்குநர் ரவிக்குமார், தேனி தாசில்தார் சதீஸ்குமார், தேனி கம்மவார் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.