Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ மேகமலையில் சாரல், பனி மூட்டம் பயணிகளின் வருகை குறைவு

மேகமலையில் சாரல், பனி மூட்டம் பயணிகளின் வருகை குறைவு

மேகமலையில் சாரல், பனி மூட்டம் பயணிகளின் வருகை குறைவு

மேகமலையில் சாரல், பனி மூட்டம் பயணிகளின் வருகை குறைவு

ADDED : அக் 16, 2025 04:47 AM


Google News
கம்பம்: மேகமலை பகுதி மலைக்கிராமங்களில் சாரல் மழையும், பனி மூட்டமும் நிலவுவதால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து வருகிறது.

மேகமலை ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராஜா மெட்டு, தூவானம் உள்ளிட்ட பகுதிகள் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளாகும். மூணாறு சீதோஷ்ண நிலையை போன்று இருப்பதால் நவம்பர் முதல் ஜனவரி வரை குளிர், அதிக பனிப்பொழிவு இருக்கும்.

இந்தாண்டு வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது.

இந்நிலையில் சில நாட்களாக சின்னமனூரிலிருந்து ஹைவேவிஸ் வரை மலை ரோட்டில் பனிமூட்டமாக உள்ளது. அத்துடன் சாரல் மழையும் பெய்கிறது, இரவு 9:00 மணிக்கு துவங்கி மறுநாள் காலை 9:00 மணி வரை பனிமூட்டம் நிலவுகிறது.

இதனால் வாகனங்களை இயக்குவதில் சிரமம் உள்ளது. இப் பகுதியில் மாலை 5:00 மணிக்கு பின் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. காலை 7:00 மணிக்கு வாகனங்களை இயக்க முடியாத நிலை உள்ளது.

தொடர்ந்து மணலாறு இரவங்கலாறு பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us